‘வளர்ச்சி ஒரு கண்; காலநிலை மற்றொரு கண்’ - காலநிலை மாற்ற நிர்வாகக்குழு கூட்டத்தில் முதல்வர் உரை..

சென்னை தலைமைச் செயலகத்தில் காலநிலை மாற்ற நிர்வாக குழுவுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். இதக்கூட்டத்தில் உரையாற்றிய முதல்வர், வளர்ச்சி ஒரு கண் என்றால், காலநிலை மாற்றம் இன்னொரு கண் என்றுன் தெரிவித்தார்.
கால்நிலை மாற்ற நிர்வாகக்குழு 2022ம் ஆண்டு அக்டோபரில் அமைக்கப்பட்டது. பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைப்பது, காடுகளின் பரப்பளவை அதிகரிப்பது, ஆலைக் கழிவுகளை தடுப்பது, விலங்கினங்களை பராமரிப்பது போன்றவற்றுக்கு திட்டங்கள் வழங்குவது இந்தக் குழுவின் தலையாய பணிகள் ஆகும். இந்நிலையில் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில், காலநிலை மாற்ற நிர்வாக குழுவுடன் ஆலோசனை நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில் அமைச்சர்கள், துறை சார்ந்த செயலாளர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
அப்போது, பாதிப்புகளைத் தடுப்பதற்காக வழிமுறைகள் குறித்தும், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்க செயல்படுத்தவேண்டிய திட்டங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், நியூசிலாந்து நாடு புயலால் பெரும் துயரை சந்தித்து வருவதாகக் கூறினார். இதேபோல் உலகம் முழுக்க பல்வேறு நாடுகள் காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்டு வருவதாகவும், இனி வரும் மாதங்களில் கடும் வெப்ப அலைகளை நாடு சந்திக்கும் என இந்திய ஆய்வு மையம் தெரிவித்துள்ளதையும் சுட்டிக்காட்டினார். உலக நாடுகள் புதிய புதிய நோய்களை சந்திக்கவுள்ளதாக எச்சரித்திருக்கிறது.
வருமுன் காக்கும் அரசாக செயல்படும் திமுக, கடந்த டிசம்பர் மாண்டஸ் புயல் கரையை கடந்தபோது தான் காலநிலை மாற்றக் குழுவை உருவாக்கியது. சுற்றுச்சூழல் பாதிப்புகளைக் குறைக்கும் வகையிலும், மாணவர்கள், பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், காலநிலை அறிவு இயக்கம் தொடங்கப்படும் என்றார். இந்த காலநிலை மாற்றக் குழு தமிழ்நாடு எப்போது கார்பன் சமநிலையை அடையும் என்பதை தீர்மானிக்கும் எனவும், வளர்ச்சி ஒரு கண் என்றால், காலநிலை மாற்றம் இன்னொரு கண் என்றும் முதல்வர் குறிப்பிட்டார். தமிழகத்தில் செயல்படுத்தப்படும் அனைத்துத் திட்டங்களும் காலநிலை மாற்ற கண்ணாடி கொண்டு ஆய்வு செய்த பிறகே செயல்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.