தமிழ் தெரிந்தவர்களுக்கு அருமையான வேலை காத்துக்கிட்டிருக்கு..!

 
1 1

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி. இந்த வங்கியில் 400 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பணியிடங்கள்  : மொத்தம் 400 
தமிழ்நாடு - 260 
ஒடிசா - 10 
மகாராஷ்டிரா - 45 
குஜராத் - 30 
மேற்கு வங்கம் - 34 
பஞ்சாப் - 21  

கல்வி தகுதி : டிகிரி மற்றும் உள்ளூர் மொழித்திறன் அவசியம். அதன்படி  தமிழகத்தில் உள்ள பணியிடங்கள் என்றால் தமிழ் தெரிந்து இருக்க வேண்டும். 
 

தேர்வு முறை : மொழித்திறன் தேர்வு, ஆன்லைன் தேர்வு 
 

வயது வரம்பு : 20 வயது முதல் 30 வயது வரை, அரசு விதிகளின் படி வயது வரம்பில் சலுகை உண்டு 
 

மாதச் சம்பளம் : ரூ. 48,480 – 85,920/- வரை 

தேர்வு முறை : ஆன்லைன் தேர்வு, நேர்முகத்தேர்வு எழுத்து தேர்வு நடைபெறும் இடங்கள் (தமிழகத்தில்) : சென்னை, மதுரை, திருநெல்வேலி, சேலம், கோவை, திருச்சிராப்பள்ளி, வேலூர், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், விருதுநகர், கன்னியாகுமரி, தஞ்சாவூர், கரூர், கடலூர், திண்டுக்கல், ராமநாதபுரம் 
 

விண்ணப்பிக்க கடைசி நாள் : 31.05.2025 

கூடுதல் தகவல்களுக்கு  https://www.iob.in/upload/CEDocuments/IOB-Recruitment-of-Local-Bank-Officer-2025-26.pdf என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம்.