கிணத்தை காணோம் என்பது போல் தெருவை கண்டுப்பிடித்து தரும்படி வரைப்படத்துடன் வந்து மனு கொடுத்த ஜி.பி.முத்து

 
s s

தூத்துக்குடி மாவட்டம், உடன்குடியில் உள்ள பெருமாள்புரத்தில் உள்ள கீழ தெருவை கண்டு பிடித்து தர கோரி சின்னத்திரை புகழ் நடிகர் ஜி.பி.முத்து மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார்.

v

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி, பெருமாள் புரத்தில் நத்தம் சர்வே எண் 233 ல் கீழ தெரு என்று ஒரூ தெரு இருந்தது, நத்தம் சர்வே எண் 233 /21 இடம் முழுக்க அரசு புறம்போக்கு பாதையாக பொதுமக்களால் பயன்படுத்தப்பட்டு வந்தது. இது வருவாய் துறை ஆவணங்களில் உள்ளது. ஆனால் கடந்த 20 ஆண்டுகளில் சிட்டிசன் திரைபடத்தில் வரும் அத்திப்பட்டு கிராமம் காணாமல் போனது போன்று மேற்படி கீழ தெரு என்று ஒரூ தெரு இருந்தது தெரியாமல் அந்த தெரு காணாமல் போய் விட்டது. அந்த தெரு இருந்த இடம் முழுக்க பல்வேறு தனி நபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளது. 

இதனால் பொதுமக்கள் செல்லும் பாதையும் அடைக்கபட்டு உள்ளது. எனவே தாங்கள் உடன் நடவடிக்கை மேற்கொண்டு அந்த இடத்தை நில அளவை செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றி உடன்குடி பெருமாள் புரத்தில் காணாமல் போன கீழ தெருவை கண்டு பிடித்து தருமாறு மாவட்ட ஆட்சியரிடம் சின்னத்திரை புகழ் நடிகர் ஜி.பி.முத்து தனது குடும்பத்தினருடன் கோரிக்கை மனு அளித்தனர். இதற்கு நடவடிக்கை இல்லையென்றால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிப்பேன் என்றார்.