‘ஆளுநர்களுக்கு வாய் மட்டும் தான் உண்டு; காதுகள் இல்லை’ - முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்..

 
ஸ்டாலின்

ஆளுநர்களுக்கு வாய் மட்டும் தான் உண்டு; காதுகள் இல்லை என்று முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

 'உங்களில் ஒருவன் பதில்கள்' என்ற தொடரில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.  அதில், ‘ஆளுநர் அரசியலில் தலையிடக் கூடாது என அண்மையில் உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு தெரிவித்துள்ளதே.. அதற்கு மத்திய பாஜக அரசின் ஆளுநர்கள் செவி மடுப்பார்களா?’என கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.

 ஆளுநர் ஆர்.என் ரவி

இதற்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின்ஆளுநர்களுக்கு வாய் மட்டும் தான் உண்டு; காதுகள் இல்லை என்று விமர்சித்துள்ளார். அவரது பதில், “இதுவரையிலான செயல்பாடுகளை பார்க்கும்போது, கவர்னர்களுக்கு வாய் மட்டும்தான் உண்டு; காதுகள் இல்லை என்றே தோன்றுகிறது”என்று கூறினார்.

மேலும் டெல்லி துணை முதலமைச்சர்  மணீஷ் சிசோடியா கைது பற்றிய கேள்விக்கு பதிலளித்த அவர், “எதிர்க்கட்சிகளை மறைமுகமாக இல்லை; வெளிப்படையாகவே பாஜக மிரட்டுகிறது என்பதற்கு எடுத்துக்காட்டுதான் இது. தன் வசம் இருக்கும் விசாரணை அமைப்புகளை அரசியல் நோக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்துகிறார்கள்.   டெல்லி துணை முதல்வர் மணீஷ் கைது கண்டிக்கத்தக்கது. பிரதமருக்கு இது தொடர்பாக கடிதம் எழுதியிருக்கிறேன். எதிர்க்கட்சிகளை தேர்தல் மூலமாக ஜெயிக்கலாமே தவிர விசாரணை ஆணையங்கள் மூலமாக வெல்ல நினைக்கக்கூடாது” என்று  தெரிவித்துள்ளார்.