ஊழல் காரணமாக வீடு இல்லாமல் தவிக்கும் நாகை மாவட்ட கிராம மக்கள் - ஆளுநர் குற்றச்சாட்டு

 
rn ravi

ஊழல் குற்றச்சாட்டின் காரணமாக நாகை மாவட்டத்தில் உள்ள ஏராளமான கிராம மக்கள் வீடு இல்லாமல் தவித்து வருவதாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம் சாட்டியுள்ளார். 

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்தார். இந்த நிலையில், இது தொடர்பாக தமிழக ஆளுநர் மாளிகையில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், நிர்வாக அக்கறையின்மை மற்றும் ஊழல் குற்றச்சாட்டால் நாகப்பட்டினம் மாவட்டத்தில் தகுதிவாய்ந்த ஏழை கிராமத்தினர் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் பலனைப் பெற முடியாமல் போனது வருத்தமளிக்கிறது. 


பாட்டாளி வர்க்க சாம்பியனாக  அழைத்துக்கொள்ளும் ஓர் அரசியல் கட்சியால் கீழ்வெண்மணி கிராமத்தில் சுற்றிலும் ஏழைகளின் ஓலை குடிசைகளுக்கு மத்தியில், படுகொலை செய்யப்பட்ட 44 ஏழைத் தொழிலாளர்களை நினைவுகூரும் வகையில் விலையுயர்ந்த கான்கிரீட் கட்டுமானம் ஒரு நினைவுச்சின்னமாக அமைந்திருப்பது முரணானது மட்டுமின்றி தியாகிகள் மற்றும் ஏழைகளுக்கு இழைக்கப்பட்ட கேலிக்குரிய அவமானமும் கூட என குறிப்பிட்டுள்ளார்.