அடக்குமுறையில் தமிழக கோவில்கள்...அச்சத்தில் ஊழியர்கள் - ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றச்சாட்டு
தமிழக கோவில்களில் அடக்குமுறை உணர்வு வெளிப்படுவதாகவும், ஊழியர்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளதாகவும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம் சாட்டியுள்ளார்.
அயோத்தியில் ராமர் கோவில் இன்று திறக்கப்படவுள்ள நிலையில், அந்த நிகழ்ச்சிகளை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்களை ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே கோவில்களில் ராமர் கோவில் நிகழ்ச்சிகளை நடத்த போலீசார் தடை விதிப்பதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பாஜகவினர் குற்றம் சாட்டியுள்ளர். இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
"இன்று காலை சென்னை, மேற்கு மாம்பலம் அருள்மிகு கோதண்டராமர் திருக்கோயிலுக்குச் சென்று, அனைவரும் நலம்பெற பிரபு ஸ்ரீராமரிடம் பிரார்த்தனை செய்தேன். இந்த கோயில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ளது.
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) January 22, 2024
பூசாரிகள் மற்றும் கோயில் ஊழியர்களின் முகங்களில் கண்ணுக்குப் புலப்படாத பயம்…
இந்த நிலையில்,தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியும் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், இன்று காலை சென்னை, மேற்கு மாம்பலம் அருள்மிகு கோதண்டராமர் திருக்கோயிலுக்குச் சென்று, அனைவரும் நலம்பெற பிரபு ஸ்ரீராமரிடம் பிரார்த்தனை செய்தேன். இந்த கோயில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ளது. பூசாரிகள் மற்றும் கோயில் ஊழியர்களின் முகங்களில் கண்ணுக்குப் புலப்படாத பயம் மற்றும் மிகப்பெரிய அச்ச உணர்வு இருந்தது. நாட்டின் பிற பகுதிகளில் கொண்டாடப்படும் பண்டிகை சூழலுக்கு முற்றிலும் அது மாறுபட்டிருந்தது. பால ராமர் பிராண பிரதிஷ்டையை நாடு முழுவதும் கொண்டாடும் போது, அக்கோயில் வளாகம், கடுமையான அடக்குமுறையின் உணர்வை வெளிப்படுத்துகிறது." - ஆளுநர் ர