பாட புத்தகங்களை எடைக்கு போட்ட அரசுப் பள்ளி ஆசிரியர்

 
பாட புத்தகங்களை எடைக்கு போட்ட அரசுப் பள்ளி ஆசிரியர்

திருத்துறைப்பூண்டியில் பாடப் புத்தகங்களை எடைக்கு போட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். 


திருத்துறைப்பூண்டி ஆலத்தம்பாடியில் இயங்கி வரும் ஜானகி அண்ணி அரசினர் மேல்நிலைப்பள்ளியில் நடப்பாண்டிற்கான நோட்டு புத்தகங்களை விற்பனை செய்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பழைய பொருட்கள் வாங்குபவர் மூட்டைக் கட்டி எடுத்து செல்லும்போது அப்பகுதி மக்கள் சூழ்ந்து தடுத்து நிறுத்தி வாக்குவாதம் செய்தனர்.