பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்..!! பஸ் பாஸ் இல்லாமலே பஸ்ஸில் பயணிக்கலாம்..!

 
1

தமிழகத்தில் 1-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படிக்கும் மாணவர்களுக்கு, 30 கிலோமீட்டர் தூரம் வரை இலவசமாக பயணம் செய்வதற்கான பஸ் பாஸ் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான மாணவர்களின் விவரங்கள் பள்ளிக்கல்வித்துறையின் ‘எமிஸ்’ தளம் வாயிலாக போக்குவரத்துக்கழகங்களுக்கு அனுப்பப்படுகின்றன.

ஆகஸ்டு 31-ந்தேதிக்குள் பஸ் பாஸ் வழங்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பள்ளிக்கல்வித்துறை மற்றும் போக்குவரத்துக்கழக அதிகாரிகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு பணிகளில் ஏற்பட்ட தாமதத்தால், பஸ் பாஸ் அச்சிடும் பணிகள் தள்ளிப்போனது. தற்போது இந்த வாரம் அச்சிடும் பணி தொடங்கப்பட்டு, செப்டம்பர் மாத இறுதிக்குள் பஸ் பாஸ்கள் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதற்கிடையே, புதிய பஸ் பாஸ் கிடைக்கும் வரை மாணவர்கள் தங்களிடம் உள்ள பழைய பஸ் பாஸை பயன்படுத்தி பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளி சீருடையில் வரும் மாணவர்களை பஸ் பாஸ் வைத்திருப்பவர்களாக கருதி பயணம் செய்ய அனுமதிக்குமாறு நடத்துனர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.