அஜித் ரசிகர்களுக்கு வந்தாச்சு குட் நியூஸ்..! அஜித்தின் ‘Dare Devil’ படப்பிடிப்பு தொடங்கும் தேதி அறிவிப்பு..!

 
1

நடிகர் அஜித்குமார் நடிக்கும் புதிய படமான ‘Dare Devil’ படத்தின் படப்பிடிப்பு வரும் நவம்பர் 2-ம் தேதி தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. அஜித்குமாரின் அடுத்த படமாக உருவாகும் இந்த திரைப்படம் தொடர்பான அறிவிப்பு மற்றும் படப்பிடிப்பு தொடக்கம் குறித்து ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. லண்டனில் நடைபெறும் கார் பந்தயம் முடிந்த பிறகு சினிமாவில் அஜித் தீவிரம் காட்டவுள்ளதாக கூறப்படுகிறது.

சினிமாவுடன் கார் பந்தயத்திலும் தீவிர ஆர்வம் கொண்டுள்ள அஜித், 'குட் பேட் அக்லி’ படத்திற்குப் பிறகு மீண்டும் சர்வதேச ரேசிங் போட்டிகளில் முழு கவனம் செலுத்தி வருகிறார். தனது சொந்த அணியான 'அஜித்குமார் ரேசிங்' மூலம் பல்வேறு சர்வதேச தொடர்களில் பங்கேற்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்து வருகிறார்.இதற்கிடையில், அஜித்தின் சர்வதேச மோட்டார் ஸ்போர்ட்ஸ் பயணத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள 'கிளாடியேட்டர்ஸ் இன் பர்சூட் ஆஃப் சேலஞ்சஸ்' ஆவணப்படத்தை இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது.

அதனை தொடர்ந்து, 'குட் பேட் அக்லி' படத்தைத் தொடர்ந்து இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுடன் அஜித் மீண்டும் இணைந்துள்ளார். அஜித்தின் 64-வது திரைப்படமாக உருவாக உள்ள இந்தப் படத்திற்கு 'டேர் டெவில்' என்று பெயரிடப்பட்டுள்ளது. பிரேவ் ஹார்ட்ஸ் புரடக்ஷன்ஸ் என்கிற பெயரில் ஷாலினி அஜித்குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மேலும், இப்படத்தில் பிரபல மலையாள நடிகர் மோகன்லால் மற்றும் தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகின.

ரசிகர்களின் பல மாதக் காத்திருப்புக்குப் பின் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்த அறிவிப்புடன் அஜித் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. இருந்த போதிலும் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடர்பான எந்தவித அறிவிப்பும் வெளியாகாமல் இருந்தது.

இந்த நிலையில், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் 'டேர் டெவில்' படத்தின் புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது, டேர் டெவில் படத்தின் படப்பிடிப்பு வருகிற நவம்பர் 2 அன்று தொடங்கவுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இது தனது பிறந்த நாளுக்காக நடிகர் அஜித்குமார் தனக்கு கொடுத்த பரிசு என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்.