குட் நியூஸ்..! இனி 3 மணி நேரத்தில் மருத்துவ காப்பீடு கோரிக்கைகளுக்கு தீர்வு..!

 
1

இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம்(ஐஆர்டிஏஐ) பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இதன்படி, மருத்துவ காப்பீடு செய்தவர்களின் கோரிக்கைகளுக்கு ஒரு மணி நேரத்திற்குள் அனுமதிப்பதுடன், அவர்கள் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்வதற்கு 3 மணி நேரத்திற்கு முன்னர் அனைத்து நடைமுறைகளையும் முடிக்கும்படி கூறியுள்ளது.

மேலும், மருத்துவ காப்பீடுகளை ஆண்டுதோறும் புதுப்பிப்பதற்கும், அதில் உள்ள பலன்களை தக்க வைத்து கொள்வதற்கும் ஒரு மாத காலம் கூடுதல் அவகாசம் வழங்கவும் உத்தரவிட்டு உள்ளது. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாக கூறியுள்ளது.

இதன் மூலம், சிகிச்சையின் போது காப்பீடு செய்தவர்கள் இறக்க நேரிட்டால், அவர்களின் உடலை ஒரு மணி நேரத்திற்குள் , அதனை எடுத்து செல்ல மருத்துவமனைகள் அனுமதி வழங்குவது உறுதி செய்யப்படும். காப்பீடு நடவடிக்கை முடிப்பதற்கு, தேவையான ஆவணங்களை மருத்துவமனையில் இருந்து நிறுவனங்கள் பெற்றுக் கொள்ளலாம். காப்பீடு செய்தவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய தேவை இனி இருக்காது. பல மருத்துவ காப்பீடு வைத்துள்ளவர்கள், தங்களுக்கு ஏதுவான காப்பீடை தேர்வு செய்து கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.