குட் நியூஸ்..! இனி ரயில் நிலையங்களில் "எகானமி மீல்ஸ்" 20 ரூபாய்க்கு விற்பனை..!

 
1

கோடை காலத்தில் ரயிலில் அதிகமான பயணிகள் பயணம் செய்வார்கள். அதிலும் குறிப்பாக முன்பதிவு செய்யாத பெட்டிகளில் அதிக பயணிகள் பயணம் செய்வார்கள். அவர்களுக்கு மலிவு விலையில் உணவு விற்பனை செய்யும் திட்டம் ஆனது இந்திய ரயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகம் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் படி 200 கிராம் எடைக் கொண்ட தயிர் சாதம், எலுமிச்சை சாதம், புளியோதரை மற்றும் கிச்சடி போன்ற உணவுகளில் ஏதேனும் ஒன்று எகானமி மீல்ஸ் என்ற பெயரில் 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

325 கிராம் எடைக் கொண்ட பூரி மசாலா மற்றும் பஜ்ஜி ஆனது ஜனதா கானா என்ற பெயரில் 20 ருபாய்க்கு விற்பனை செய்யப்பட உள்ளது. அதேபோல் 350 கிராம் எடையுள்ள மசால் தோசை உட்பட தென்னிந்திய உணவு வகைகள் ஆனது ஸ்னாக் மீல்ஸ் என்ற பெயரில் 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

உணவுகள் மட்டுமின்றி 200 மி.லி. தண்ணீர் பாட்டில் ஆனது 3 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில் பயணிகள் எவ்வித சிரமமும் இல்லாமல் இந்த உணவுகளை வாங்கும் வகையில் முன்பதிவு செய்யப்படாத பொது பெட்டிகளுக்கு அருகில் நடைமேடைகளில் இந்த உணவுகளுக்கான கவுன்ட்டர்கள் அமைக்கப்பட உள்ளன எனவும் இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.