குட் நியூஸ்..! 3 ஆண்டுகால சட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

 
1

தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் 26 அரசு மற்றும் தனியார் சட்டக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன.இவை நடப்பு கல்வியாண்டு (2024-25) இணைய வழி கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த ஜூலை 3-ம் தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவு பெற்றது. மொத்தம் 7 ஆயிரம் மாணவர்கள் இதுவரை விண்ணப்பித்துள்ளனர்.

இதற்கிடையே, பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களில் இறுதியாண்டுக்கான பருவத் தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை. இதை கருத்தில் கொண்டு மாணவர்கள் நலன் கருதி விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூலை 31-ம் தேதி மாலை 5.45 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

விருப்பமுள்ள மாணவர்கள் www.tndalu.ac.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். கலந்தாய்வு விதிகள், விண்ணப்பக் கட்டணம் உட்பட கூடுதல் விவரங்களை மேற்கண்ட வலைத்தளத்தில் அறிந்து கொள்ளலாம்.