அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை - இல்லத்தரசிகள் கவலை!

 
gold

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 அதிகரித்து ரூ.42,600-க்கு விற்கப்படுகிறது. 

தங்கம் விலை கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த வார தொடக்கத்தில் சரிவில் இருந்த தங்கம் விலை கடந்த 10-ந்தேதி முதல் தங்கம் விலை மீண்டும் உயரத் தொடங்கியது. கடந்த 10ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.41,520க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று முன்தினம் ஒரு சவரன் ரூ.42 ஆயிரத்தை தாண்டியது. அதாவது நேற்று முன் தினம் ஒரு சவரன் ரூ.42,160-க்கு விற்கப்பட்டது. இதேபோல் ஞாயிற்று கிழமையான நேற்றும் அதே விலையே நீடித்தது. 

இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 அதிகரித்து ரூ.42,600-க்கு விற்கப்படுகிறது.  நேற்று 1 கிராம் தங்கம் ரூ.5,270-க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று கிராமுக்கு ரூ.55 அதிகரித்து ரூ.5,325-க்கு விற்கப்படுகிறது. இதே போல் வெள்ளி விலையும் இன்று அதிகரித்துள்ளது. நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.68.70-க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று கிராமுக்கு 80 காசுகள் அதிகரித்து ரூ.69.50-க்கு விற்கப்படுகிறது. 1 கிலோ பார் வெள்ளி ரூ.69,500-க்கு விற்பனையாகிறது. கடந்த 2 நாட்களில் மட்டும் தங்கம் சவரனுக்கு  ரூ.1,080 உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள் கவலை அடைந்துள்ளனர்.