ஒரே நாளில் 2-வது முறையாக தங்கம் விலை உயர்வு

சென்னையில் ஒரே நாளில் 2-வது முறையாக தங்கம் விலை உயர்ந்துள்ளது.
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. சர்வதேச பொருளாதார நிலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணங்களால் தினமும் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. வாரத்தின் முதல் நாளான திங்கள் கிழமை தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.66,280க்கு விற்பனையானது. நேற்று சவரனுக்கு ரூ.480 குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.65,800க்கு விற்பனையானது. சென்னையில் இன்று காலை, 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.66,320க்கும், கிராமுக்கு 65 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.8,290க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் ஒரே நாளில் 2-வது முறையாக தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. ரூ.960 அதிகரித்து ரூ. 67, 280க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.120 உயர்ந்து, ரூ.8,410க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையைவிட இன்று தங்கம் விலை ரூ.1,480 உயர்ந்துள்ளது. தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் இல்லத்தரசிகள் கவலை அடைந்துள்ளனர்.