அண்ணாமலை படத்துடன் ஆடு வெட்டுவதை வேடிக்கை பார்க்க முடியாது- ஐகோர்ட்

 
அண்ணாமலை படத்துடன் ஆடு

அண்ணாமலை படத்துடன் ஆடு வெட்டியதை நீதிமன்றம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

அண்ணாமலை படத்துடன் ஆட்டை வெட்டி தி.மு.க.,வினர் அராஜகம்

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் மு.க கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. பா.ஜ.க கூட்டணி 40 தொகுதிகளிலும் தோல்வி அடைந்தது. கோவையில் போட்டியிட்ட பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை தோல்வி அடைந்தார்.  அண்ணாமலை தோல்வியை கொண்டாடும் வகையில் கிருஷ்ணகிரியில் திமுகவினர், அண்ணாமலையின் படத்தை ஆட்டின் தலையின் ஒட்டி, சாலையின் நடுவே அந்த ஆட்டை வெட்டினர்.

Highcourt

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக பிரமுகர் மோகன் தாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில் ஆடு வெட்டிய திமுக தொண்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், சாலையில் ஆடு ஆடு வெட்டிய விவகாரத்தை வேடிக்கை பார்க்க முடியாது, ஆகவே இதுகுறித்து தமிழக அரசு சார்பில் விளக்கம் அளிக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.