குமரியில் கண்ணாடி பாலம் இன்று திறப்பு
கன்னியாகுமரியில் விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலையை இணைக்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை 4.30 மணியளவில் திறந்து வைக்கிறார்.
குமரி சுற்றுலா தலத்தில் கடல் நடுவே விவேகானந்தர் நினைவு மண்டபமும்,அதன் அருகில் உள்ள மற்றொரு பாறையில் 133 அடி உயர திரு வள்ளுவர் சிலையும் எழுப்பப்பட்டு உள்ளது. இவற்றை தினமும் ஆயிரக்கணக்கான உள் நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்த்து வருகிறார்கள். இதற்கு வசதியாக தமிழ்நாடு அரசு நிறுவனமான பூம்புகார் கப்பல் போக்குவர ரத்து கழகம் சார்பில் பொதிகை, குகன்,விவேகானந்தா ஆகிய மூன்று சுற்றுலா படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. தினந்தோறும் காலை 8 மணிக்கு தொடங்கும் படகு போக்குவரத்து மாலை 4 மணி வரை இடைவேளை இன்றி தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கும், திருவள்ளுவர் சிலைக்கும் இடையே அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி இழை கூண்டு பாலம் திறப்பு விழா இன்று மாலை நடைபெறவுள்ளது. இதையொட்டி விவேகானந்தர் மண்டபத்துக்கு இயக்கப்படும் படகு போக்குவரத்து இன்று பகல் 12 மணி வரை மட்டுமே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு கண்ணாடி கூண்டு பாலம் திறப்பு விழாவை முன்னிட்டு படகு போக்குவரத்து அன்று நண்பகலுக்கு பிறகு ரத்து செய்யப்படுவதாக பூம்புகார் கப்பல் போக் குவரத்து கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
குமரி கடல் நடுவே அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை நிறுவி 25 ம் ஆண்டு வெள்ளி விழா மற்றும் திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் மண்டபத்தை இணைக்கும் கண்ணாடி கூண்டு பாலம் திறப்பு இன்று நடைப்பெறுகிறது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டு கண்ணாடி கூண்டு பாலத்தை திறந்து வைக்கிறார்.