"நெல் குவிண்டால் ஒன்றுக்கு ஆதார விலையாக ரூ .3,500 வழங்குக" - ஜி.கே.வாசன் வலியுறுத்தல்!!

 
paddy

நெல் குவிண்டால் ஒன்றுக்கு ஆதார விலையாக ரூ .3,500 வழங்க வேண்டும் என்று ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தில் தற்பொழுது மயிலாடுதுறை பெய்துவரும் மழையால் திருவாரூர் , நெற்பயிர்கள் மழையில் நனைந்து மிகவும் பரவலாக போன்ற நாகப்பட்டிணம் , அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் , அவை பாதிக்கப்பட்டுள்ளது . தமிழகத்தில் கடந்த மாதங்களில் பெய்த மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகமாக வந்ததால் வழக்கமாக அணை திறப்பதற்கான தேதிக்கு முன்னரே தண்ணீர் திறந்துவிடப்பட்டது . இதனால் விவசாயிகள் உடனடியாக உழவுப் பணிகளை தொடங்கினார்கள் . அவை இப்பொழுது அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் கடும் மழையின் காரணமாகவும் , ஆற்றில் அதிகமாக உபரிநீர் திறந்துவிடப்பட்டதாலும் , நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியும் , நெல்மணிகள் தரையில் சாய்ந்தும் முளைக்க தொடங்கியுள்ளது . இவை விவசாயிகளை பெரிதும் கவலைக்குள்ளாக்கி இருக்கிறது.

gk

டெல்டா மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை ஆய்வு செய்து அவர்கள் பயிர் காப்பீடு செய்திருந்தாலும் , செய்யாவிட்டாலும் , அவர்கள் , அனைவருக்கும் உரிய இழப்பீட்டை தமிழக அரசு உடனே வழங்க வேண்டும் . இழப்பீடு உடனே கிடைத்தால்தான் விவசாயிகள் மேலும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படாமல் , மீண்டும் தாளடி பயிர் செய்ய ஏதுவாக இருக்கும் . தற்பொழுது தமிழக அரசு 2022-2023 ஆண்டிற்கான நெல்லுக்கு ஆதார விலையை அறிவித்துள்ளது . பொது ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ .2,115- ம் , சன்னரகம் நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ .2,160 - ம் அறிவித்துள்ளது . இந்த தொகை போதுமானதாக இல்லை.

paddy

நடப்பாண்டில் நெல் உற்பத்தியின் செலவு ஒரு குவிண்டாலுக்கு ரூ .1,986 என்று கணக்கிடப்பட்டுள்ளது . உற்பத்தி செலவை விட லாபம் ரூ .129 தான் அதிகம் என்றால் விவசாயிகளுக்கு எப்படி கட்டுப்படியாகும் , அவர்களின் நிலை எவ்வாறு உயரும் . நாட்டில் மற்ற துறைகளை விட விவசாயத்திற்கு மட்டும் தான் இந்த நிலை இருக்கிறது . இந்நிலை மாற வேண்டும் . ஆகவே தமிழக அரசு , நெல்லுக்கு அளிக்கும் ஊக்கத் தொகையை மேலும் அதிகரித்து குவிண்டால் ஒன்றுக்கு ரூ .3,500 வழங்கினால் வழங்கினால் தான் விவசாயிகளுக்கு ஓரளவிற்கு ஆதாயமாக இருக்கும் . அதோடு இதுவரை நஷ்ட கணக்கையையே பார்த்து வந்த விவசாயிகள் லாபகணக்கை துவங்க முடியும் . விவசாயமும் வளர்ச்சியடையும் .  எனவே மத்திய , மாநில அரசுகள் விவசாயிகளின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன் " என்று குறிப்பிட்டுள்ளார்.