காதலனுக்கு விஷம் கொடுத்த காதலி குற்றவாளி என தீர்ப்பு

 
s

கன்னியாகுமரி அருகே கசாயத்தில் விஷம் கலந்து கொடுத்து காதலனை கொன்ற வழக்கில் காதலி கிரீஷ்மா குற்றவாளி என நிலம் நெய்யாற்றின்கரை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

 காதலனுக்கு விஷம் கொடுத்த காதலி.. வெளியான பகீர் தகவல்..  தற்கொலை முயற்சியால் பரபரப்பு..

கன்னியாக்குமரி எல்லையில் கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் பாறசாலையைச் சேர்ந்த ஜெயராஜ் என்பவரது மகன்  ஷாரோன் ராஜ்(23). பி.எஸ்சி மூன்றாம் ஆண்டு படித்து வந்த ஷாரோன் ராஜ்,  களியக்காவிளை அருகே ராமவர்மன்சிறை பகுதியைச் சேர்ந்த  கீரிஷ்மா  என்கிற பெண்ணை  காதலித்து வந்துள்ளார். அந்த பெண்ணுக்கு வேறு ஒருவருடன் நிச்சயம் செய்யப்பட்டிருக்கும் நிலையில், வீட்டுக்குத் தெரியாமல் அவர்  ஷாரோன் ராஜை  காதலித்து வந்திருக்கிறார். இருவரும் வெட்டுக்காடு சர்ச்சில் ரகசியமாகத் திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது.  ஷாரோன் ராஜிக்கு கல்லூரி சம்பந்தப்பட்ட ரெக்கார்ட் நோட்டுக்கள் எழுதி கொடுப்பது போன்ற உதவிகளை அந்தப்பெண் செய்து வந்திருக்கிறார். அந்தவகையில் கடந்த 14ம் தேதி  இரண்டு நோட்டுக்களை எழுதி முடித்து வைத்திருப்பதாகக் கூறி ஷாரோனை தனது வீட்டிற்கு அழைத்த கீரிஷ்மா,  ஜூஸ் குடித்துள்ளார். பின்னர்  நண்பருடன் சென்றுகொண்டிருந்த போது  ஷாரோன் ராஜ் வாந்தி எடுத்திருக்கிறார்.

 காதலனுக்கு விஷம் கொடுத்த காதலி.. வெளியான பகீர் தகவல்..  தற்கொலை முயற்சியால் பரபரப்பு..

இதுகுறித்து அவர் நண்பர் கேட்டதற்கு, கீரிஷ்மா  கொடுத்த ஜூஸ் குடித்தது ஒத்துக்கொள்ளவில்லை எனக் கூறியிருக்கிறார் ஷாரோன் ராஜ். பின்னர் வீட்டிற்குச் சென்றதும் அவரது உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து,  பாறசாலையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக  திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்  சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சையில் இருந்த ஷாரோன் ராஜின் உள்ள உறுப்புகள் செயல் இழந்து போயுள்ளன. அப்போது அவர் ஆசிட் போன்ற விஷம் குடித்திருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

 காதலனுக்கு விஷம் கொடுத்த காதலி.. வெளியான பகீர் தகவல்..  தற்கொலை முயற்சியால் பரபரப்பு..


இதுகுறித்து ஷாரோன் ராஜின் தந்தை புகார் அளித்ததன்பேரில், க்ரீஷ்மாவிடம் நடத்திய விசாரணையில் களைக்கொல்லி பூச்சிமருந்தை கஷாயத்தில் கலந்து ஷாரோன் ராஜுக்குக் கொடுத்ததாக ஒப்புக்கொண்டதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் கன்னியாகுமரி அருகே கசாயத்தில் விஷம் கலந்து கொடுத்து காதலனை கொன்ற வழக்கில் காதலி கிரீஷ்மா குற்றவாளி என கேரளா மாநிலம் நெய்யாற்றின்கரை நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. கிரீஷ்மா மற்றும் அவரது தாய்மாமன் நிர்மல்குமார் ஆகியோர் குற்றவாளிகள் என்றும், தண்டனை விவரங்கள் நாளை அறிவிக்கப்படும் என்றும் நெய்யாற்றின்கரை நீதிமன்றம் அறிவித்துள்ளது. மேலும் கிரீஷ்மாவின் தாயார் சிந்துவுக்கு எதிராக ஆதாரங்கள் இல்லை என நீதிமன்றம் கூறியுள்ளது.