விபத்தின் போது கேட் கீப்பர் பங்கஜ் சர்மா தூங்கியுள்ளார் - ரயில்வே காவல்துறை

 
விபத்தின் போது கேட் கீப்பர் பங்கஜ் சர்மா தூங்கியுள்ளார் - ரயில்வே காவல்துறை விபத்தின் போது கேட் கீப்பர் பங்கஜ் சர்மா தூங்கியுள்ளார் - ரயில்வே காவல்துறை

கடலூர் அருகே செம்மங்குப்பத்தில் ஏற்பட்ட ரயில் விபத்தில் மூன்று பள்ளி மாணவ மாணவிகள் உயிரிழந்த நிலையில், விபத்தின் போது கேட் கீப்பர் பங்கஜ் சர்மா தூங்கியுள்ளார் என ரயில்வே காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

கடலூர் பள்ளி வேன் விபத்து: கேட் கீப்பர் சிறையிலடைப்பு.. 

கடலூாில் இயங்கி வரும் ஒரு தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளிக்கு சொந்தமான வேன் ஒன்று கடலூர் அருகே உள்ள தொண்டமாநத்தம் பகுதிக்கு மாணவர்களை ஏற்ற சென்றது. வேனை கடலூர் மஞ்சக்குப்பத்தை சேர்ந்த சின்னபையன் மகன் சங்கர்(வயது 47) என்பவர் ஓட்டினார். வேனில் சின்னகாட்டு சாகை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த திராவிடமணி மகள் 11-ம் வகுப்பு படித்து வரும் சாருமதி, 10-ம் வகுப்பு படித்து வரும் அவரது தம்பி செழியன், தொண்டமாநத்தம் விஜயசந்திரகுமார் மகன் 10-ம் வகுப்பு படித்தும் வரும் விஸ்வேஷ் (15), 6-ம் வகுப்பு படித்து வரும் அவனது தம்பி நிமலேஷ் (12) ஆகிய 4 பேர் ஏறினர். செம்மங்குப்பம் ரெயில்வே கேட் அருகே காலை 7.45 மணிக்கு பள்ளி வேன் வந்தது. அப்போது ரெயில்வே கேட் திறந்து இருந்ததால், சங்கர் வேனை முன்னோக்கி இயக்கி, ரெயில்வே கேட்டை கடந்து செல்ல முயன்றார். அந்த சமயத்தில், விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை நோக்கி சென்ற பயணிகள் ரயில் வந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் ரெயில் பள்ளி வேன் மீது மோதியதில் மூன்று மாணவர்கள் உயிரிழந்தனர். 

இந்நிலையில் ரயில் விபத்துக்கு காரணமான கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவை தெற்கு ரயில்வே சஸ்பெண்ட் செய்தது. மேலும் அவரை கைது செய்து ரயில்வே காவல்துறை விசாரித்தனர். ரயில் விபத்து நடந்தபோது கேட் கீப்பர் பங்கஜ் சர்மா ரயில்வே கேட்டை திறந்து வைத்து தூங்கியது விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர் பணி நேரத்தில் 5 க்கும் மேற்பட்ட முறை தூங்கியதாகவும், ரயில் வருவது குறித்து தெரிவிக்க ஸ்டேஷன் மாஸ்டர் அழைத்த போது பங்கஜ் சர்மா போனை எடுக்கவில்லை என்றும் போலீசார் கூறியுள்ளனர். விபத்து நடந்த பின்னரே பங்கஜ் சர்மா தூக்கத்திலிருந்து எழுந்து வந்துள்ளார்.