சேலத்தில் சிலிண்டர் வெடித்ததில் ஒருவர் பலி; 5 வீடுகள் தரைமட்டம்!!
சேலத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்த விபத்தில் மூதாட்டி ஒருவர் பலியாகியுள்ளார்.
சேலம் மாவட்டம் கருங்கல்பட்டி பாண்டுரங்கன் தெருவில் உள்ள வீட்டில் இன்று சமையல் சிலிண்டர் வெடித்து சிதறியது. இந்த விபத்தினால் அருகில் இருந்த 5 வீடுகள் தரைமட்டம் ஆனது. அத்துடன் இந்த விபத்தில் மூதாட்டி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அத்துடன் 7 க்கும் மேற்பட்டோர் விபத்து பகுதியில் சிக்கியுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் மீட்புப் பணிகளில் துரிதமாக ஈடுபட்டு வருகின்றனர். விபத்தில் காயமடைந்த 5-க்கும் மேற்பட்டோருக்கு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
🦉சேலம் கருங்கல்பட்டியில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 வீடுகள் தரைமட்டமானதால் 4 பேர் காயம்; இடிபாடு களில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தீவிரம்!
— Àanthai Répørter (MASKUpTN) 🦉 (@aanthaireporter) November 23, 2021
தீயணைப்புத்துறை ஊழியர் பத்மநாபன் என்பவரது வீட்டில் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது!#Salem pic.twitter.com/JE875qDmIS
🦉சேலம் கருங்கல்பட்டியில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 வீடுகள் தரைமட்டமானதால் 4 பேர் காயம்; இடிபாடு களில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தீவிரம்!
— Àanthai Répørter (MASKUpTN) 🦉 (@aanthaireporter) November 23, 2021
தீயணைப்புத்துறை ஊழியர் பத்மநாபன் என்பவரது வீட்டில் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது!#Salem pic.twitter.com/JE875qDmIS
தீயணைப்புத் துறை ஊழியர் பத்மநாபன் என்பவர் வீட்டிலிருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.