திருவாரூர் மாவட்டத்துக்கு வெள்ளிக்கிழமை உள்ளூர் விடுமுறை

 
திருவாரூர் மாவட்டத்துக்கு வெள்ளிக்கிழமை உள்ளூர் விடுமுறை

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஜாம்புவானோடை தர்கா சந்தனக்கூடு விழாவை முன்னிட்டு வரும் நவ.24ஆம் தேதி திருவாரூர் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சமூக நல்லிணக்கத்துக்கு சான்றாக விளங்கும் ஜாம்புவானோடை தர்கா | muthupettai  dargah

முத்துபேட்டையில் அமைந்துள்ளது தாவூத் காம் தர்கா. இங்கு ஒலியுல்லாஹ் என்னும் இஸ்லாமிய சூபி அடக்கம் செய்யப்பட்டுள்ளார். இதனை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும்  கந்தூரி விழா நடத்தப்பட்டு வருகிறது. ஜாம்புவானோடை தர்கா மஹான் செய்குதாவுது ஒலியுல்லாஹ் ஆண்டவரின் 722 ஆவது ஆண்டு விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.  

தொடர்ந்து 14 நாட்கள் நடைபெறும் கந்தூரி விழாவில் தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.  முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு நிகழ்ச்சி வரும் 24ஆம் தேதி நடைபெற இருக்கிறது . இந்த நிகழ்வை காண வெளிநாடுகளில் இருந்தும் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்வர். இதனை முன்னிட்டு வரும் நவ.24ஆம் தேதி திருவாரூர் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ உத்தரவு பிறப்பித்துள்ளார்.