"குழந்தைகளுக்கான இலவச காக்ளியர் இம்ப்ளாண்ட் சிகிச்சை" - கனிமொழி கோரிக்கை

 
Kanimozhi

தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையுடன் இணைந்து MERF அறக்கட்டளை சென்னை நடத்தும் காது மற்றும் பேச்சு குறைபாடுள்ள அனைத்து குழந்தைகளுக்கும் இலவச பரிசோதனை செய்து காது பிரச்சனைகளை கண்டறிந்து காக்கிளியர் இம்பிளான்ட் மற்றும் அறுவை சிகிச்சை செய்ய முகாம் நடத்தப்பட உள்ளது.

tuticorin

இம்முகாம் 09.03.24 அன்று தூத்துக்குடி வ.உ.சி கல்லுாரி கலை அரங்கத்திலும் 10.03.24 அன்று திருச்செந்துார் சிவந்தி ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லுரியிலும் வைத்து காலை 10.00 மணியிலிருந்து 01.00 மணி வரை நடைபெறும் முகாமிற்க்கு வரும் மாற்றுத்திறனாளிகள் தங்கள் ஆதார் கார்டு, பாஸ்போட் சைஸ் போட்டோ, குடும்ப அட்டை நகல் உடன் கலந்து கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கோ.லட்சுமிபதி இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.


இந்நிலையில் திமுக எம்.பி.கனிமொழி , தலைவர் கலைஞர் அவர்கள் தொடங்கி வைத்த முன்னணி மருத்துவ திட்டம் குழந்தைகளுக்கான இலவச காக்ளியர் இம்ப்ளாண்ட் சிகிச்சை!

இன்று தூத்துக்குடி வ.உ.சி கல்லூரி கலை அரங்கத்திலும், நாளை திருச்செந்தூர் சிவந்தி ஆதித்தனார் கல்லூரியிலும் நடைபெறும் பேச்சு மற்றும் செவித் திறன் குறைபாடுள்ள குழந்தைகளுக்கான இலவச மருத்துவ பரிசோதனை முகாமில் கலந்துகொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று தனது சமூகவலைத்தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.