திமுக பாஜகவிடம் சரணாகதி அடைந்தது - ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்

 
udhayakumar

திமுக பாஜகவிடம் சரணாகதி அடைந்து இருக்கிறது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:  வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவின் குரல் தமிழ்நாடு மக்களின் உரிமைக் குரலாக ஒலிக்கும். தமிழகம் முழுவதும் 68 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பூத் கமிட்டிகளை அமைத்திருக்கின்றோம். எம்ஜிஆர், ஜெயலலிதா காலங்களில் அதிமுக இருந்தது போல வலிமையோடு களத்தில் நிற்க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரவு, பகல் பாராது உழைத்துக் கொண்டிருக்கிறார். பொதுச் செயலாளரின் வியூகம் 100% தமிழக மக்களிடையே மிகப்பெரிய அளவில் வெற்றியைத் தேடித் தரும். மாநில உரிமைகளுக்காக போராடி வருகிற, உழைத்து வருகிற, மாநில உரிமையை மையமாக வைத்து களம் காணும் அதிமுகவை தோளோடு தோள் கொடுத்து துணை நிற்கிற அனைத்து கட்சிகளையுமே வரவேற்கிறோம்.

rb udhayakumar


பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறி விட்டோம் என்பதை அதிமுக பொதுச் செயலாளர் அடிக்கடி தெளிவு படுத்தி வருகிறார். ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து பொதுச்செயலாளர் முறையாக அறிவிப்பார். தேர்தல் எந்த வகையில் வந்தாலும் எதிர்கொள்ள தயாராக இருக்க ஏற்கெனவே பொதுச்செயலாளர் அறிவுறுத்தியுள்ளார். திமுக பாஜகவிடம் சரணாகதி அடைந்து இருக்கிறது. உடல் ஓர் இடத்திலும் உள்ளம் ஒரு இடத்திலுமாக திமுக இருக்கிறது. அதிமுகவை பொறுத்தவரை உடலும், உள்ளமும், உறுதியும் தமிழ்நாடு மக்களின் நலனின் நலனை மையப்படுத்தி தான் இருக்கிறது. பிரதமர் தமிழகம் வருகையின் போது எதிர்கட்சியாக இருந்த திமுக கருப்புக்கொடி காட்டிவிட்டு, தற்போது அவரை நேரில் அழைப்பது என்பது என்ன நிலைப்பாடு? பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவின் உரிமையை சட்டமன்றத்தில் சபாநாயகர் காப்பாற்ற வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.