கிணற்றில் விழுந்த குட்டி யானை - 10 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்ட வனத்துறையினர்

 
tn

நீலகிரி மாவட்டம் பந்தலூர் குறிஞ்சி நகர் பகுதியில் நேற்று நள்ளிரவில் யானை கூட்டத்திலிருந்த குட்டி யானை ஒன்று தவறி கிணற்றுக்குள் விழுந்தது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் கிணற்றுக்குள் இருக்கும் குட்டி யானையை மீட்க நடவடிக்கை மேற்கொண்டனர். 

இந்நிலையில் நீலகிரி மாவட்டம் கொளப்பள்ளி பகுதியில், 30 அடி ஆழ கிணற்றில் விழுந்த குட்டி யானையை வனத்துறையினர் 10 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்ட னர்.  

tn

கிணற்றின் அருகே ஜேசிபி மூலம் பள்ளம் தோண்டி, வனத்துறையினர் யானையை மீட்டனர். 
மீட்கப்பட்ட குட்டி யானையை தாயுடன் சேர்க்கும் முயற்சியில் வனத்துறை தீவிரம் காட்டி  வருகின்றனர்.