அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களுக்கு ஓ.எஸ். மணியன் அழைப்பு..!
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலத்தை அடுத்த வழுவூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். தொடர்ந்து முருகன் கோவிலில் வழிபட்ட பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஓ.எஸ். மணியன், பல்வேறு அரசியல் விவகாரங்கள் குறித்துக் கருத்துத் தெரிவித்தார்.
தற்போது தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டு நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணி குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த ஓ.எஸ். மணியன், "வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் என்பது ஒன்றும் புதிதல்ல. புதிதாக ஏதோ ஒன்றை மத்திய தேர்தல் ஆணையம் திணிப்பதாக யாரும் கருத வேண்டாம். இது ஏற்கனவே பலமுறை நடைபெற்றுள்ளது; தற்போது மீண்டும் நடைபெறுகிறது. எதிர்க்கட்சிகள் கூறுவது போல, இந்தத் திருத்தப் பணியால் எந்தவித ஆபத்தோ, பாதிப்பையோ ஏற்படுத்தக்கூடியது அல்ல. இது மிகவும் நல்லதொரு நடைமுறை. வரவேற்கத்தக்கது, ஏற்றுக்கொள்ளத்தக்கது," என்று தெரிவித்தார்.
பூர்த்தி செய்வது கிராமப் பகுதி மக்களுக்குக் கடினமாக இருக்கும் என அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கூறியுள்ளது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்குப் பதிலளித்த ஓ.எஸ். மணியன், "இதிலிருந்தே அவர் (டி.டி.வி. தினகரன்) எதை நோக்கிப் பயணிக்கிறார் என்பதை எல்லாரும் புரிந்துகொள்ள முடியும். விண்ணப்பம் மிக மிக எளிமையான வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கிராமப்புற மக்கள் எளிதில் பூர்த்தி செய்யும் வகையிலேயே உள்ளது. மேலும், இதில் உள்ள சந்தேகங்களைத் தீர்ப்பதற்கு ஏதுவாக, வாக்குச்சாவடி அலுவலரின் எண்ணும் விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பம் கடினமாக உள்ளது என்று சொல்வது விநோதமாக உள்ளது," என்று குறிப்பிட்டார்.
வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் ஒன்றிணைய வாய்ப்புள்ளதா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.இதற்குப் பதிலளித்த ஓ.எஸ். மணியன், "முதலில் பிரிந்து சென்றவர்கள் அனைவரும் வந்து மன்னிப்புக் கேட்கட்டும். அவர்கள் மன்னிப்புக் கேட்டால், அது குறித்து எங்களுடைய பொதுச் செயலாளரிடம் நாங்களும் பேசுகிறோம்," என்று பதிலளித்தார். இதன் மூலம், பொதுச்செயலாளரின் ஒப்புதலுடனும், சில நிபந்தனைகளுடனும் பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் இணைத்துக்கொள்வதற்கான வாய்ப்புகள் உள்ளதை அவர் சூசகமாகத் தெரிவித்தார்.

