"பிரதமா் மோடியின் நல்லாட்சி தொடர கூட்டணியில் இணைந்துள்ளோம்"- அன்புமணி பேட்டி!!
![TN](https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/e1ee0cc6a0e7ba027c958d2f1e9f8218.jpg)
பிரதமா் மோடியின் நல்லாட்சி தொடர கூட்டணியில் இணைந்துள்ளோம் என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.
பாஜக - பாமக இடையில் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. ராமதாசுடன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மத்திய இணை அமைச்சர் எல். முருகன் ஆகியோர் சந்திப்ப பாஜக கூட்டணியில் பாமகவுக்கு பத்து மக்களவைத் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் நடைபெற்ற ஒப்பந்தத்தையடுத்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், பிரதமர் மோடியின் நல்லாட்சி தொடரவும், தமிழ்நாட்டில் மாற்றம் வரவும் இந்த முடிவை எடுத்துள்ளோம். மோடி மூன்றாவது முறையாக பிரதமராக தேர்வு செய்யப்படுவார். கடந்த 10 ஆண்டுகளாக பாஜக அங்கமாக பாமக இருந்து வருகிறது. திராவிட கட்சிகள் மீது தமிழக மக்களுக்கு எதிரான மனநிலை ஏற்பட்டுள்ளது. 60 ஆண்டுகளாக தமிழகத்தை ஆள்பவர்களை மாற்ற வேண்டும் என மக்கள் எண்ணுகின்றனர் என்றார்.