தென்காசி பழைய குற்றால அருவியில் வெள்ளப் பெருக்கு - பொதுமக்கள் குளிக்கத் தடை

 
குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு!

தென்காசி, பழைய குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை அடுத்து சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்து காவல் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

 

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்த தொடர் மலை காரணமாக குற்றாலத்தில் அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் பாதுகாப்பு கருதி அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்னும் சில நாட்கள் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் இன்று  பலத்த மழை பெய்தது.

இதன் காரணமாக புதன்கிழமை மாலை பழைய குற்றால அருவியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதேசமயம் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் வழக்கம் போல் குறைவான  அளவில் தண்ணீர்  விழுந்து கொண்டிருந்தது. பாதுகாப்பு கருதி பழைய குற்றால அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்ட நிலையில் தற்போது மெயின் அருவி ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.