ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை.. சாலையோர நின்ற காரில் சடலமாக கண்டெடுப்பு..

 
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை.. சாலையோர நின்ற காரில் சடலமாக கண்டெடுப்பு..  ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை.. சாலையோர நின்ற காரில் சடலமாக கண்டெடுப்பு.. 

 புதுக்கோட்டையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் காரில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

புதுக்கோட்டை  - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் நமனசமுத்திரம் என்னும் பகுதிக்கு அருகே சாலையோரமாக ஒரு கார் நீண்ட நேரமாக நின்றுகொண்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், காரை சோதனை செய்து பார்த்ததில் அதில் 2 பெண்கள் உள்பட 5 பேர் சடலமாக கிடந்தனர். இதனையடுத்து உடல்களைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டதில், 5 பேரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.  

suicide

முதற்கட்ட விசாரணையில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டனம் மற்றும் அவரது குடும்பத்தினர் என்பதும்,  தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்துள்ளது. முன்னதாக அவர்களிடமிருந்து ஒரு கடிதத்தை போலீஸார் கைப்பற்றியிருந்தனர். அதில் மணிகண்டன் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாகவும், அதன் காரணமாக தற்கொலை செய்துகொள்வதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.  

 இதனையடுத்து சம்பவ இடத்தில் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகை உள்ளிட்ட ஆதாரங்களை பதிவு செய்து கொண்டனர். தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் காரில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.