உடனே இந்த வேலையை செஞ்சு முடிச்சிடுங்க..! வரும் 31ம் தேதி தான் கடைசி நாள்..!

 
11 11

ரேஷன் கார்டில் குடும்ப உறுப்பினர்களின் விவரங்களை சரிபார்ப்பதற்காக அனைவரும் கைரேகை பதிவு செய்திருக்க வேண்டும் என அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி விரல் ரேகையை பதிவு செய்வதோடு ஆதார் கார்டையும் சரி பார்க்கும் பணி நடைபெறுகிறது. இந்த பணி 2024ல்  தொடங்கிய நிலையில் 2025 மார்ச் மாதத்திற்குள் முடிக்க திட்டமிட்டு இருந்தனர். ஆனால் 40 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த வேலையை செய்து முடிக்காததால் மே 31ம் தேதி வரை கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.

ரேஷன்


இதன் காரணமாக வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் வசித்து வந்தாலும் கைரேகை பதிவு செய்ய முடியாதவர்கள் தாங்கள் வசிக்கும் மாவட்டம் மற்றும் மாநிலங்களில் ஐஎம்பிடிஎஸ் அல்லது இகேஒய்சி மூலமாக இந்த பணியை செய்து முடிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதற்கான கால அவகாசம் மே 31ம் தேதி என்பதால் இன்னும் 14 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் இந்தப் பணியை  உரிய நேரத்திற்குள் முடிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.