முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் ரூ.500 ஆக அதிகரிப்பு... தமிழக அரசு அறிவிப்பு..

 
முகக்கவசம்


பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு விதிக்கப்படும் அபராதம் ரூ.200-ல் இருந்து ரூ.500-ஆக உயர்த்தி  தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அரசு சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.  அதில் ஒரு பகுதியாக முகக்கவசம் அணிய வேண்டும்,  பொது இடங்களில் சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும் என்று  தொடர்ந்து  வலியுறுத்தப்பட்டு வருகிறது. கடந்த 2  ஆண்டுகளாக இதுகுறித்து தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தாலும், பொதுமக்கள் பலர் கொரோனா விதிமுறைகளை பின்பற்றுவதே இல்லை.  இதனால் தமிழக அரசு சார்பில் முகக்கவசம் அணியாதவர்களிடம் ரூ. 200 அபராதம் வசூலிக்கப்பட்டு வந்தது.

19ம் தேதி முதல் யாரும் முகக்கவசம் அணிய வேண்டிய அவசியம் இருக்காது

இருந்தபோதிலும்  பலர் முகக்கவசம் அணியாமலும்,  பலர் முறையாக முகக்கவசம் அணியாமலும் இருப்பதை  பார்க்க முடிகிறது. இதனால் தமிழகத்தில் கொரோனா  பாதிப்பு பன்மடங்காக  உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும்  17,934 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா அதிகரித்து வரும் நிலையில்,  முகக்கவசம் அணியாதவர்களுக்கு விதிக்கப்படும் அபராதத்தொகை ரூ.200 லிருந்து  ரூ. 500 ஆக உயர்த்தி  தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

சட்டவிரோதமாக மாணவர் சேர்க்கை; மருத்துவக் கல்லூரிகளுக்கு ரூ.5 லட்சம் அபராதம்!

மேலும் பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் எனவும்  கூறியுள்ளது. பொங்கல் பண்டிகைக் காலத்தில் தொற்று பரவல் அதிகரிக்காமல் இருக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் மாஸ்க் அணியும் போது மூக்கு மற்றும் வாய் முழுமையாக மூடியிருக்க வேண்டும் என கூறியுள்ளது. பொது இடங்களில் மக்கள் கூட்டம் கூட கூடாது எனவும், சமூக இடைவெளியை  கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும் அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.