பெற்ற மகளை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய தந்தை

 
rape

பெற்ற மகளை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய தந்தை போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

Couple held for sexual abuse of 12-year-old girl in Kochi - KERALA -  GENERAL | Kerala Kaumudi Online

சென்னை அடுத்த செங்குன்றத்தை சேர்ந்தவர் ஏழுமலை (38). இவர், சமையல் வேலை செய்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் இரு மகள்கள் உள்ளனர். கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஏழுமலையின், மனைவி சொந்த ஊருக்கு சென்று விட  13வயது மகள் பாட்டி வீட்டுக்கு சென்று உள்ளார். மேலும், மற்றொரு மகளான 16வயது மகள் தந்தையுடன் இருந்துள்ளார். அப்போது, ஏழுமலை மகளுக்கு குடி போதையில் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். 

இந்த தகவலை யாரிடமும் கூற கூடாது என்றும் மகளை மிரட்டி உள்ளார். இதற்கிடையில், நேற்று பாலியல் தொல்லைக்கு ஆளான மகள் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து, தாய் அவளை அழைத்துக்கொண்டு ராயபுரம் அரசு மருத்துவமனைக்கு சென்று பரிசோதனைக்கு சென்றுள்ளார். அப்போது, அங்கு மருத்துவர்கள் சிறுமி 8 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனை கேட்டு தாய் அதிர்ச்சி அடைந்தார். மேலும், இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதிலட்சுமி தலைமையில் போலீசார் சிறுமியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது தந்தை ஏழுமலையின் பாலியல் தொந்தரவால் தான் சிறுமி கர்ப்பம் அடைந்தது தெரியவந்தது.

இதனை அடுத்து, போலீசார் போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்து  ஏழுமலையை இன்று கைது செய்தனர்.