பைக் மீது அதிவேகமாக மோதிய கார்- தந்தை, மகள் பலி!

 
accident

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில் தந்தை, மகள் உயிரிழந்தனர். 

Accident

சித்தரேவு கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் (48), அவரது மகன் புகழ், மகள் சௌமியா (8) ஆகிய 3 பேரும் தைத்திருநாளை முன்னிட்டு உறவினர் வீட்டுக்கு  ஒரே டூவீலரில் வத்தலக்குண்டு - செம்பட்டி ரோட்டில் சென்றுள்ளனர். இவர்களது டூவீலர்  வத்தலக்குண்டு செம்பட்டி ரோடு, சாலைப்புதூர் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது, வத்தலக்குண்டில் இருந்து செம்பட்டி நோக்கி சென்ற கார் அவர்கள் மீது பயங்கரமாக மோதியது. 


இதில் தூக்கி வீசப்பட்ட முருகன், புகழ், சௌமியா ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்தில் தலையில் பலத்த காயம் அடைந்த முருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த புகழ் மற்றும் சௌமியா ஆகியோரை சிகிச்சைக்காக வத்தலக்குண்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் சௌமியா உயிரிழந்தார். மேலும், படுகாயம் அடைந்த புகழ் தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநரான செங்கட்டாம்பட்டியைச் சேர்ந்த ராம்கி (36) படுகாயமடைந்த நிலையில், வத்தலக்குண்டு அரசு  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.  இந்த விபத்து குறித்து பட்டிவீரன்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.