வாணியம்பாடி அருகே நிலத்தகராறில் விவசாயி அடித்துக்கொலை

 
murder

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே பூங்குளம் மாஞ்சோலை  வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் முனிசாமி. இவருக்கு தமிழரசன் மற்றும் முரளி என்ற இரண்டு மகன்கள். சகோதரர்கள் இருவருக்கும் சொந்தமாக மொத்தம் 3 ஏக்கர் விவசாய  நிலம் உள்ளது. அதில் அவர்கள் விவசாயம் செய்து வந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பாக முரளி மர்மமான முறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாதாக கூறப்படுகிறது. 

murder News, photos and videos, murder हिंदी न्यूज़ | page-1

இந்நிலையில், இறந்த முரளியின் மனைவி குடும்பத்தினருக்கும், தமிழரசனின் குடும்பத்திற்கும் நில தகராறு ஏற்பட்டு அவ்வப்போது வாக்குவாதம் இருந்துவந்ததாக கூறப்படும் நிலையில், இன்று வழக்கம் போல் விவசாய நிலத்தில் விவசாய பணிகளை மேற்கொண்டிருந்த தமிழரசனிடம் இறந்துபோன தம்பி முரளியின் மனைவி மேகலா, அவரது அக்கா நவநீதம், முரளியின் மாமியார் இந்திரகுமாரி, மாமனார் நாகராஜி, உட்பட 4 பேர் நிலத்தகராறில் ஈடுபட்டனர். 

அப்போது வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியதில், 4 பேரும் சரமாரியாக தமிழரசனை தாக்கியுள்ளனர். இதில் தமிழரசன் மூச்சுத் திணறி மயக்கமடைந்துள்ளார். தமிழரசனின் அலறல் சத்தம் கேட்டு  ஓடிவந்து, அவரை மீட்ட அவரது குடும்பத்தினர் ஆலங்காயம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்ற நிலையில்,செல்லும் வழியிலேயே தமிழரசன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 

இசம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த  ஆலங்காயம் போலீசார், தமிழரசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து ஆலங்காயம் காவல்துறையினர், சந்தேகத்தின் பேரில் நான்கு நபர்களை ஆலங்காயம் காவல் நிலையம் அழைத்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.