தமிழ்நாடு மாநில திட்டக்குழுவின் பகுதி நேர உறுப்பினராக எழிலன் நியமனம்!!

 
tn

மாநில திட்டக்குழுவின் பகுதிநேர உறுப்பினராக ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர்  எழிலன் நாகநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் மாநில திட்டக்குழு மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களால் 1971ஆம் ஆண்டு மே திங்கள் 25ஆம் நாள் ஏற்படுத்தப்பட்டது . மாநில திட்டக்குழு தமிழ்நாடு முதல்வர் தலைமையில் ஒரு ஆலோசனை அமைப்பாக செயல்பட்டு, மாநிலத்தின் பல்வேறு வளர்ச்சி காண செயல்பாடுகளில் தனது பரிந்துரைகளை அரசுக்கு அளித்து வருகிறது. மாநில திட்டக்குழு துணைத் தலைவர் அவர்களின் கீழ் வளர்ச்சி சார்ந்த முக்கிய துறைகளின் நிபுணர்கள் உறுப்பினர்களாக கொண்டு இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது.

மாநில வளர்ச்சி கொள்கை குழுவிற்கு புதிய உறுப்பினர்கள்  நியமனம் : முதலமைச்சர் உத்தரவு

மாநிலத் திட்ட குழுவானது கடந்த 2020 ஆம் ஆண்டு மாநில வளர்ச்சி கொள்கை குழுவாக மறு சீரமைப்பு செய்யப்பட்டு அதன் இன்றியமையாத பணிகளான இலக்கு நிர்ணயிப்பது கண்காணிப்பது, மதிப்பீடு மற்றும் கொள்கைக்கான ஆலோசனை வழங்குதல், கொள்கை ஒத்திசைவு உருவாக்குதல், சிறப்பு திட்டங்களை செயல்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு முக்கியமான பணிகளை மேற்கொண்டு வருகிறது. மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவுக்கு புதிய உறுப்பினர்களை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. அதன்படி பேராசிரியர் ஜெ.ஜெயரஞ்சன் மாநில வளர்ச்சிக் கொள்கை குழுவின் துணைத் தலைவராகவும், பேராசிரியர் சீனுவாசன் முழுநேர உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் பேராசிரியர் விஜயபாஸ்கர் , பேராசிரியர் சுல்தான் அகமது இஸ்மாயில், தீனபந்து, திமுக எம்எல்ஏ டிஆர்பி ராஜா, மல்லிகா சீனிவாசன். மருத்துவர் அமலோற்பவ நாதன், சித்த மருத்துவர் சிவராமன் மற்றும் முனைவர் நர்த்தகி நடராஜ் உள்ளிட்டோர் பகுதிநேர உறுப்பினர்களாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மாநில வளர்ச்சி கொள்கை குழுவிற்கு புதிய உறுப்பினர்கள்  நியமனம் : முதலமைச்சர் உத்தரவு

இந்நிலையில் மாநில திட்டக் குழுவின் பகுதி நேர உறுப்பினராக ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் எழிலன்  நாகநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மாநில திட்டக்குழுவில் உறுப்பினராக இருந்த, மன்னார்குடி தொகுதி உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா தொழில்துறை அமைச்சரான நிலையில் அறிவிக்கப்பட்டுள்ளது.