ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஓரிரு நாளில் வீடு திரும்புவார் - மருத்துவர் தகவல்

 
evks

நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காங்கிரஸ் எம்.எல்.ஏ, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நலமுடன் இருப்பதாகவும், ஓரிரு நாளில் வீடு திரும்புவார் என்றும் மருத்துவர் தெரிவித்துள்ளார்.  

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ ஈவிகேஎஸ் இளாங்கோவன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை போரூரில் உள்ள ராமசந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதாகவும் இதையடுத்து அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக  தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே நேற்று காலை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்தார். அப்போது, மருத்துவர்கள் குழுவிடம் அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார். 

இந்நிலையில், ராமசந்திரா ஆஸ்பத்திரியின் இருதயவியல் மருத்துவ்வர் மூர்த்தி, ஈவிகேஎஸ் இளாங்கோவன் உடல்நிலை குறித்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது:- ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் டெல்லி சென்று திரும்பிய நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இருமல் அதிகமாக இருந்தது. லேசான நுரையீரல் பாதிப்பு இருந்த நிலையில் தற்போது நலமுடன் உள்ளார். ஓரிரு நாட்களில் குணமடைந்து வீடு திரும்புவார். உடல்நிலை சீராக உள்ளது. ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு தற்போது இயல்பாக உள்ளது. நோய் எதிர்ப்பு மருந்துகளை வழங்கி இருக்கிறோம். தொடர்ந்து அவருக்கு சிகிச்சையாக வழங்கப்பட்டு மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளதோடு, உடல்நிலை சீராக உள்ளது. இவ்வாறு கூறினார்.