#mkstalin பாஜகவில் உள்ள அனைவரும் இந்த கேவலமான பிரிவினைவாத அரசியலில் ஈடுபடுவதை உடனே நிறுத்த வேண்டும்- முதல்வர் மு.க.ஸ்டாலின்

 
stalin
பிரதமர் முதல் தொண்டர் வரை பாஜகவில் உள்ள அனைவரும் இந்த கேவலமான பிரிவினைவாத அரசியலில் ஈடுபடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும்!
பெங்களூரு ராமேஸ்வரம் கபே குண்டு வெடிப்பிற்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர்தான் காரணம் என்று பாஜக மத்திய அமைச்சர் கே. ஷோபா கூறியிருந்தார்.
Shoba
அதற்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கம் மூலமாக கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார்.
 அதில் அவர், "பொறுப்பற்றத்தனமாக பேசியிருக்கும் ஒன்றிய பாஜக அமைச்சர் சோபா கரந்த்லாஜே அவர்களுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

 

 பாஜகவின் இந்த பிளவுபடுத்தும் பேச்சுகளை தமிழர்களும் கன்னடர்களும் உறுதியாக நிராகரிப்பார்கள்.
 அமைதி நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒற்றுமைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்திய அமைச்சர் சோபா மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
பிரதமர் முதல் தொண்டர் வரை பாஜகவில் உள்ள அனைவரும் இந்த கேவலமான பிரிவினைவாத அரசியலில் ஈடுபடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும்!
இந்த வெறுப்பு பேச்சை தேர்தல் ஆணையம் உடனடியாக கவனத்தில் கொண்டு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்".என்று பதிவிட்டுள்ளார்.