ஈரோடு இடைத்தேர்தல்: விரக்தியில் வெளியேறிய அதிமுக வேட்பாளர்!..

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்கு என்னும் மையத்தில் இருந்து அதிமுக வேட்பாளர் தென்னரசு விரக்தியில் வெளியேறினார். 4வது சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், அதிமுக சார்பாக அவர் மட்டுமே மையத்தில் இருந்ததால் விரக்தியில் வெளியேறினார்.
காலை 8 மணி முதல் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. 3 சுற்றுகள் முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் 32,959 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார். அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு 10,727 வாக்குகள் பெற்று 2வது இடத்திலும், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா 1,832 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்திலும், தேமுதிக சார்பில் போட்டியிட்ட ஆனந்த் 220 வாக்குகள் பெற்று 4வது இடத்திலும் உள்ளனர்.
இதில் அதிமுக வேட்பாளர் தென்னரசுவை விட காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் 3 மடங்கு அதிக வாக்குகள் பெற்றுள்ளார். ஈரோடு கிழக்கில் இதுவரை நடந்த தேர்தல்களின் வெற்றி வித்தியாசத்தை விட அதிக வாக்குகளுடன் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலையில் இருந்துவருகிறார். அவர் கிட்டத்தட்ட 22 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அவர் முன்னிலையில் உள்ளார். காலை முதலே அதிமுக வேட்பாளர் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வரும் நிலையில், வாக்கு எண்ணும் மையத்தில் அவர் மட்டுமே இருந்து வந்தார். இந்நிலையில் 4வது சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், அதிமுக சார்பாக அவர் மட்டுமே மையத்தில் இருந்ததால் விரக்தியில் வெளியேறினார்.