"ஈரோடு இடைத்தேர்தலில் தவெக போட்டியா?”- வெளியான அறிவிப்பு

 
vijay

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தவெக போட்டியிடவில்லை என கட்சித் தலைமை அறிவித்துள்ளது.


ஈரோடு கிழக்கு தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேரா, கடந்த 2013 ஜனவரி 4.ம் தேதி உயிரிழந்தார். இதன் காரணமாக கடந்த ஆண்டு பிப்ரவரி 27.ம் தேதி நடைபெற்இடைத்தேர்தலில், காங்கிரஸ் கமிட்டி முன்னாள் மாநில தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்ற நிலையில், அவரும் டிசம்பர் 14.ம் தேதி உடல் நல்குறைவால் உயிரிழந்தார். இதனையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது இரண்டாவது் முறையாக இடைத்தேர்தல் பிப்ரவரி 5.ம் தேதி நடைபெறுகிறது. வேட்புமனு தாக்கல் ஜனவரி 10 ஆம் தேதி தொடங்கப்படும் என்றும், வேட்புமனு தாக்கலுக்கு கடைசி நாள் ஜனவரி 17 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனு பரிசீலனை 18.01.2025 அன்று நடைபெறும். வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 8 ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

விஜய்

இந்நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தவெக போட்டியிடவில்லை என கட்சித் தலைமை அறிவித்துள்ளது. தமிழக வெற்றிக் கழகத்திற்கு 2026 சட்டமன்ற தேர்தல் தான் இலக்கு என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.