ஈபிஎஸ் உறவினர் ராமலிங்கம் ரூ.500 கோடி வரி ஏய்ப்பு

ஈரோட்டில் ஈபிஎஸ் உறவினர் ராமலிங்கம் தொடர்பான இடங்களில் நடந்த சோதனையில் ரூ.750 கோடி வரி ஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியின் நெருங்கிய உறவினர் N.ராமலிங்கம். ஈரோடு அருகே வேலாங்காட்டு வலசு கிராமத்தை சேர்ந்த இவருக்கு சொந்தமான RCCL கன்ஸ்ட்ரக்சன் நிறுவனம் ஈரோட்டை தலைமை இடமாக கொண்டு இயங்கி வருகிறது. இதன் இயக்குநர்களாக ராமலிங்கத்தின் மகன்கள் சூரியகாந்த், சந்திரகாந்த் உள்ளனர். இந்த நிறுவனத்திற்கு ஈரோடு பெங்களூர் சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கட்டுமான நிறுவனங்கள் கிளைகள் உள்ளன. தமிழ்நாடு மட்டுமன்றி கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களிலும் அரசு துறை கட்டுமானங்களில் இந்த நிறுவனம் கால் பதித்து பெரிய திட்டங்களை மேற்கொள்ளும் ஒப்பந்த்தாரர்களாக செயல்பட்டு வருகின்றனர். சாலைப்பணிகள், கடல் சார் திட்டம், மின் துறை ஒப்பந்நங்கள் கட்டுமானங்கள், என பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை இந்நிறுவனம் மேற்கொண்டுள்ளது. இந்த நிறுவனம் வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் இறங்கினர். கடந்த 7ஆம் தேதி தொடங்கிய வருமான வரித்துறை சோதனை 5 நாட்களுக்கு பின் நேற்றிரவு நிறைவு பெற்றது.
இந்நிலையில் ஈரோடு ராமலிங்கம் தொடர்பான நிறுவனங்களில் ரூ.500 கோடி வரி ஏய்ப்பு நடந்ததாக வருமான வரித்துறை தகவல் கடந்த 5 நாள்களாக நடந்த வருமான வரித்துறை சோதனையில் பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு கண்டறியப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 26 இடங்களில் நடைபெற்ற சோதனையில் 10 கோடி ரூபாய் பணம் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.