“வயதான தாய் என்று கூட பாராமல் கடும் துயருக்கும், மன உளைச்சலுக்கும் ஆளாக்கப்பட்டார்”- சவுக்கு சங்கர் தாயாருக்கு இபிஎஸ் இரங்கல்

 
EPS

யூட்யூபர் சவுக்கு சங்கர் அவர்களின் தாயார் திருமதி. கமலா அம்மாள் அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த துயருற்றேன் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சவுக்கு சங்கர் தாயார் மரணம்: மகன் விடுதலைக்காக தொடர்ந்து சட்டப் போராட்டம்  நடத்தியவர்

இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில், “யூட்யூபர் திரு. சவுக்கு சங்கர் அவர்களின் தாயார் திருமதி. கமலா அம்மாள் அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த துயருற்றேன். தனது மகன் திமுக அரசை எதிர்த்து பேசிய ஒரே காரணத்திற்காக, திருமதி. கமலா அம்மாள் அவர்களை திமுக அரசின் காவல்துறையால், திமுக மற்றும் கூட்டணி கட்சி குண்டர்களால் சந்தித்த துயரங்கள் ஏராளம். வயதான தாய் என்று கூட பாராமல் அவரும் கடும் துயருக்கும், மன உளைச்சலுக்கும் ஆளாக்கப்பட்டார்.

இந்நிலையில், திருமதி. கமலா அம்மாள் அவர்கள் மாரடைப்பால் உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. பாசமிகு தாயாரை இழந்து வாடும் திரு. சவுக்கு சங்கர் அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல். மறைந்த திருமதி. கமலா அம்மாள் அவர்களின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.