ரயில் தண்டவாளத்தில் படுத்து தற்கொலைக்கு முயன்ற முதியவரை நொடியில் மீட்ட ஊழியர்
நெல்லை வண்ணாரப்பேட்டை அருகே தண்டவாளத்தில் படுத்து கிடந்து தற்கொலைக்கு முயன்ற முதியவரை ரயில்வே கி மேன் புத்தி சொல்லி மீட்ட வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.
நெல்லை வண்ணாரப்பேட்டையில் உயிரை மாய்த்துக் கொள்வதற்காக தண்டவாளத்தில் படுத்திருந்த முதியவரை மீட்ட ரயில்வே ஊழியர்
— Kᴀʙᴇᴇʀ - தக்கலை கபீர் (@Autokabeer) April 26, 2026
மகன் தாக்கியதால் இம்முடிவெடுத்ததாக முதியவர் கூற, அவரிடம் ஆறுதலாகப் பேசி ஆட்டோ ஓட்டுநரிடம் ஒப்படைத்து வீட்டிற்கு கூட்டிச் செல்ல அறிவுறுத்தியுள்ளார் ரயில்வே கீ-மேன்… pic.twitter.com/hMeF35cIhU
நெல்லை வண்ணாரப்பேட்டை அருகே ரயில்வே கீ மேன் மீனாட்சி சுந்தரம் இன்று காலை 6:00 மணிக்கு தண்டவாளத்தில் நடந்து சென்று தனது பணியை பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார். அப்பொழுது ரயில்வே தண்டவாளத்தில் முதியவர் ஒருவர் தலையை வைத்து படுத்து தற்கொலைக்கு முயன்ற நிலையில் இருந்திருக்கிறார். இதைப் பார்த்த மீனாட்சி சுந்தரம் உடனடியாக முதியவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி என்ன பிரச்சனை எதற்காக இதுபோன்று தற்கொலைக்கு முயல்கிறீர்கள் என்றெல்லாம் கேட்டு இருக்கிறார். அந்த நேரத்தில் நெல்லை மேலச்செவல் பகுதியைச் சேர்ந்த சுப்ரமணியன் எனது பெயர் மகன் என்னை தாக்கியதால் மன வேதனையில் இது போன்ற தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்ததாக அந்த முதியவர் கூறி இருக்கிறார்.
உடனடியாக ரயில்வே கீ மேன் மீனாட்சி சுந்தரம் தற்கொலை செய்து கொள்வது தீர்வல்ல என்பது குறித்து எல்லாம் அறிவுரை கூறி முதியவரை மீட்டு அருகில் இருந்த ஆட்டோ டிரைவர் ஒருவரிடம் ஒப்படைத்திருக்கிறார். காலையிலேயே தண்டவாளத்தில் ஆய்வு பணிக்குச் சென்ற ரயில்வே கி மேன் தற்கொலைக்கு முயன்ற முதியவரை மீட்ட சம்பவம் நெல்லையில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

