நாளை தேர்தல் நாள் : வாக்குச்சாவடிக்கு மொபைல் கொண்டு செல்லலாமா..?

 
vote

ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும், வாக்காளர் உதவி மையங்கள் அமைக்கப்படும். வாக்காளர்கள் தங்களது வாக்குச்சாவடி எண், வரிசை எண் ஆகியவற்றை அந்தந்த வாக்குச்சாவடியின் வாக்காளர் பட்டியலில் கண்டறிய உதவுவதற்காக, வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் /அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்று அங்கு இருக்கும். வாக்காளர் உதவி மையங்களில் தெளிவான அடையாளப் பலகைகள் பொருத்தப்பட்டிருக்கும். மேலும் வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்குச் செல்லும்போது, வழிகாட்டி சுவரொட்டிகள் எளிதில் கண்ணுக்குத் தெரியும்படி அமைக்கப்பட்டு இருக்கும்.

வாக்காளர்களின் வசதிக்காக தேர்தல் ஆணையம் எடுத்துள்ள பல முயற்சிகளில் ஒன்றாக, வாக்குச்சாவடி நுழைவாயிலுக்கு வெளியே வாக்காளர்களுக்கான கைப்பேசி பாதுகாப்பு வசதி வழங்கப்படும். வாக்காளர்கள், வாக்குச்சாவடிக்குள் நுழைவதற்கு முன்பு தங்களது கைபேசியை (அணைத்த நிலையில்), அதற்கென நியமிக்கப்பட்ட தன்னார்வலரிடம் ஒப்படைத்து, வாக்களித்த பிறகு அதைத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்.

குறைந்தபட்ச வசதிகளை வழங்குவது கட்டாயமானது என்றும், அனைத்து வாக்குச் சாவடிகளிலும் அவை கண்டிப்பாகப் பின்பற்றப்படுகின்றனவா என்பது கண்காணிக்கப்படும் என்றும் ஆணையம் மீண்டும் தெரிவித்துள்ளது. அனைத்து வாக்காளர்களுக்கும் தடையற்ற, சிறந்த வாக்குப்பதிவு அனுபவத்தை உறுதி செய்வதற்காக, அனைத்து களப் பணியாளர்களும் வாக்குப்பதிவுத் தேதிகளுக்கு முன்பே தேவையான பணிகளை முடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.