3 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு 25 ஆண்டுகள் சிறை

 
Ganapathy

கரூரில் 3 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.1.60 லட்சம் அபராதம் விதித்து கரூர் மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

5 Different Types of Nursing Home Abuse | MKR Law Firm

கரூர் வெங்கமேட்டை சேர்ந்தவர் கணபதி (61). இவர் அவரது வீட்டில் அவ்வப்போது பூஜைகள் நடத்துவது வழக்கம். அதே பகுதியில் தந்தையை இழந்த 10, 12, 13 வயதுடைய 3 சிறுமிகள் தாயின் பராமரிப்பில் இருந்துள்ளனர். கணபதி நடத்தும் பூஜைகளுக்கு சிறுமிகள் 3 பேரும் சென்று வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக சிறுமிகள் 3 பேரையும் கணபதி தனித்தனியே வரச்சொல்லி தீர்த்தம், பொங்கல் ஆகியவற்றை கொடுத்து அச்சிறுமிகளுக்கு தனித்தனியே பாலியல் துன்புறுத்தல்கள் பலமுறை அளித்துள்ளார். இதுகுறித்து 3 சிறுமிகளும் தாயிடம் தெரிவித்ததை அடுத்து சிறுமிகளின் தாய் வெங்கமேடு போலீஸில் கடந்த 2019ம் ஆண்டு புகார் அளித்தார். இதையடுத்து குழந்தைகளை பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் போக்சோ சட்டம், பெண்கள் வன்கொடுமை, ஆபாசமாக திட்டுதல், கொலை மிரட்டல் ஆகிய 4 சட்டங்களின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீஸார் கணபதியை கைது செய்தனர்.     

கரூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்த இவ்வழக்கில் நீதிபதி நசீமாபானு இன்று வழங்கிய தீர்ப்பில், கணபதிக்கு 25 ஆண்டுகள் தண்டனையும், ரூ.1.60 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.