அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் - வேட்பு மனு தாக்கல் செய்தார் எடப்பாடி பழனிசாமி

 
nomination

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிடுவதற்காக, அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேட்பு மனு தாக்கல் செய்தார். 

எடப்பாடி பழனிச்சாமி தற்போது அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக உள்ளார். இவர் நிரந்தர பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்படுவதற்காக அதிமுகவில் பொதுச் செயலாளர் தேர்தல் நடத்தப்படுகிறது.  இது குறித்து அதிமுக தலைமை கழகம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில்,   அதிமுக பொதுச்செயலாளர் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவார் என்கிற கட்சியின் சட்ட விதியின் படி பொதுச் செயலாளர் பொறுப்பிற்கு தேர்தல் நடத்தப்படுகிறது.  இந்த பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட விரும்புவோர் இன்று முதல் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யலாம்.  காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

admk office

ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணி வரை மனுக்களை தாக்கல் செய்யலாம். மார்ச் 20 ஆம் தேதி அன்று வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறுகிறது. மனுக்களை வாபஸ் பெற விரும்புவோர் மார்ச் மாதம் 21ம் தேதி அன்று பிற்பகல் 3 மணிக்குள் திரும்பப் பெறலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.  மார்ச் 26 ஆம் தேதி அன்று காலை 8 மணி முதல் மாலை 6:00 மணி வரைக்கும் பொதுச்செயலாளர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மார்ச் 27ஆம் தேதி திங்கட்கிழமை வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறாது. பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட விரும்புவோர் அதிமுக தலைமைக் கழகத்தில் கட்டணத் தொகை 25 ஆயிரம் ரூபாய் செலுத்தி விருப்பமான பெறலாம் என்றும் , விதிமுறைகளை பின்பற்றி விருப்பமுனுக்களை பூர்த்தி செய்து தலைமைக் கழகத்தில் வழங்கலாம் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டிருக்கிறது.இதனிடையே இன்று காலை 10 மணிக்கு வேட்பு மனு தாக்கல் தொடங்கியது.

ep

 

இந்நிலையில்,  .அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட எடப்பாடி பழனிசாமி இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.  .அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தும் அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ள நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோரிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து யாரும் வேட்பு மனுவை தாக்கல் செய்ய வாய்ப்பு இல்லை என்பதால் அவர் போட்டியிடின்றி தேர்வாக வாய்ப்பு உள்ளது. இதற்கிடையே, பொதுச்செயலாளர் தேர்தலை தடுத்து நிறுத்துவது சட்ட ரீதியான வாய்ப்புகளை ஓபிஎஸ் தரப்பு ஆலோசிப்பதாக கூறப்படுகிறது. சென்னை ஐகோர்ட்டில் கூடுதல் மனுவை தாக்கல் செய்யலாம் எனவும் கூறப்படுகிறது.