பிரபல நடிகையின் ரூ.34 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்
Jul 4, 2025, 22:00 IST1751646617000
நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளது.

துபாயிலிருந்து தங்கம் கடத்தி வந்ததாக கூறப்படும் வழக்கில் நடிகை ரன்யா ராவ் கைது செய்யப்பட்டு பெங்களூரு பரப்பன அக்கரகாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரிடம் 14.8 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. சட்டவிரோத கடத்தலில் ஈடுபட்டிருக்கலாம் என அதிகாரிகள் நம்புகின்றனர். கைது செய்யப்பட்ட நடிகை ரான்யா ராவ், கிச்சா சுதீப்புடன் மாணிக்யா உள்ளிட்ட கன்னடப் படங்களிலும், 'பதாகி' மற்றும் 'வாகா' போன்ற தமிழ்ப் படங்களிலும் நடித்துள்ளார்.

இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வரும் நிலையில், கன்னட நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை விளக்கம் அளித்துள்ளது.

