உஷார்! ரயில் நிலைய குடிநீரில் இ-கோலி பாக்டீரியா- CAG அதிர்ச்சி தகவல்
Aug 16, 2026, 13:36 IST1786867576657
8 ரயில் நிலையங்களின் Water Cooler குடிநீரில் E.coli பாக்டீரியா கண்டறியப்பட்டது.
8 ரயில் நிலையங்களின் Water Cooler குடிநீரில் E.coli பாக்டீரியா கண்டறியப்பட்டது. கோவை, பாலக்காடு ஜங்ஷன், ஹைதராபாத், CSMT, பிவாண்டி ரோடு, கல்யாண், லோனாவலா, மதுபூர் உள்ளிட்ட 105 நிலையங்களில் பிளாட்பார்ம் குடிநீர் குழாய் மாதிரிகளில் E.coli உள்ளிட்ட Total Coliform பாக்டிரியாக்கள் கண்டறியப்பட்டன. 59 நிலையங்களில் குடிநீருக்கான பாக்டிரியா பரிசோதனையே மேற்கொள்ளப்படவில்லை. சில இடங்களில் குளோரின் அளவும் சரியான அளவில் இல்லை.
E.coli கலந்த தண்ணீர் குடித்தால்?
வயிற்றுப்போக்கு, வயிற்றுவலி, வாந்தி, காய்ச்சல், நீரிழப்பு ஏற்படலாம் என இந்திய தலைமை கணக்கு தணிக்கையாளர் (CAG) எச்சரிக்கை விடுத்துள்ளது.

