நான் ஓசில குடிக்க போனேன்; என்னால ஃபைன் கட்ட முடியாது - போதையில் போலீசாரிடம் பெண் ரகளை!!

 
ttn

சென்னையில் இரவு வாகன தணிக்கையின் போது பெண் ஒருவர் குடித்துவிட்டு வந்து போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழகம் முழுவதும் போலீசார் இரவு நேரங்களில் வாகன தணிக்கையில் ஈடுபடுவதும், ரோந்து பணியில் ஈடுபடுவதும் வழக்கம். இந்த சூழலில் சென்னையில் விபத்தை தவிர்க்கும் வகையில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவரை போலீசார் ஆங்காகே பிடித்து அபராதம் கட்ட சொல்லி வருகின்றனர். இந்த சூழலில் சம்பந்தப்பட்ட நபரின் வாகனமும் பறிமுதல் செய்யப்படும்.

tn

இந்நிலையில் பெண் ஒருவர் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிவந்த நிலையில் போலீசாரிடம் அபராதம் கட்ட பணமில்லை என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். காலையில் வந்து வாகனத்தை எடுத்து செல்லுங்கள் என்று போலீசார் கூற, ஊதுனா வண்டி தரேன்னு தானே சொன்னீங்க என் வண்டிய குடுங்க நான் போறேன்  என்று அந்த பெண் ரகளையில் ஈடுபடுகிறார். ஒருகட்டத்தில், யார் தான் சார் குடிக்கல, நான் டெய்லி குடிச்சிட்டு தான் வண்டி ஓட்டிட்டு போறேன். அப்போல்லாம் பிடிக்கல; இப்போ ஏன் பிடிச்சிருக்கீங்க. உங்க வீரத்தை பொண்ணு கிட்ட தான் காட்டுவீங்களா  என்று கூச்சலிடுகிறார்.


தொடர்ந்து அந்த பெண், என்னால பைன்லாம் கட்ட முடியாது. நானே ஓசில போய் தான் குடிச்சிட்டு வரேன் என்று அந்த பெண் கூறுவது போல அந்த வீடியோ முடிகிறது. இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவ, பலரும் பல கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.