சென்னையில் ரூ.70 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்

சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ரூ.70 கோடி மதிப்புள்ள 6.9 கிலோ மெத்தம்பெட்டமைன் மற்றும் ரூ.7 லட்சம் பணத்தை போதைப்பொருள் தடுப்பு பிரிவு கைப்பற்றியது.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து ராமநாதபுரம் மூலமாக இலங்கைக்கு கடத்தவிருந்த 6.9 கிலோ எடை கொண்ட மெத்தம்பட்டமைன் (Methamphetamine) எனும் கொடிய வகை போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ. 70 கோடியாகும். போதைப்பொருள் கடத்திவந்த பயணி உட்பட 3 பேரை கைது செய்த போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார், அவர்களிடமிருந்து ரூ.7 லட்சம் பணத்தை கைப்பற்றியது. போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக பைசூல் ரஹ்மான், இப்ராஹிம், மன்சூர்" ஆகிய மூன்று பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது செய்யப்பவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் செங்குன்றம் அருகே போதைப் பொருட்களை பதுக்கி வைப்பதற்காகவே தனி குடோன் இயங்கி வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.