குழந்தை பிறப்பில் சந்தேகம் - அடித்து கொன்ற தம்பதி - கொடூர சம்பவம்!!

 
tt

சிவகங்கை அருகே நாட்டாக்குடியை சேர்ந்தவர் சந்திரசேகர். இவர் கோவையில் டீக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்த நாகர்கோவிலில் சேர்ந்த மஞ்சு என்ற 25 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு முனீஸ்வரன் என்ற 4 மாத  குழந்தை இருந்துள்ளது. 

tt

குடும்ப பிரச்சினை காரணமாக கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்து நிலையில் கடந்த மே 20ம் தேதி சொந்த ஊரான நாட்டக்குடிக்கு சென்றுள்ளனர்.  மர்மமான முறையில்  குழந்தை  இறந்ததாக கூறி அவர்களது குழந்தையை யாருக்கும் தெரியாமல் புதைத்துள்ளனர்.  இது தொடர்பாக திருப்பாச்சேத்தி போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சந்திரசேகரனிடம் விசாரணை நடத்தினர்.

arrest
 விசாரணையில் சம்பவத்தன்று மனைவி மஞ்சு தனது குழந்தையுடன் சிவகங்கை சென்றதாகவும், மீண்டும் வரவில்லை என்றும் மொபைலில் தொடர்பு கொண்ட போதும் குழந்தையை நாட்டாக்குடி கட்டப்புலி கோயில் அருகே பையில் வைத்து விட்டு நாகர்கோவில் சென்று விட்டதாக தெரிவித்தார்.  இதையடுத்து அங்கு சென்று பார்த்த போது குழந்தை சடலமாக இருந்துள்ளது.  தனது தாயார் காளிமுத்து உடன் சேர்ந்து குழந்தையின் உடலை மயானத்தில் புதைத்ததாக சந்திரசேகரன் தெரிவித்தார்.  குழந்தையை தோண்டி எடுத்த போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.  தலையில் ஏற்பட்ட பலத்த காயத்தால் குழந்தை இறந்தது தெரிய வந்தது.  குழந்தை பிறப்பில் சந்திரசேகருக்கு சந்தேகம் ஏற்பட்டதால் அவரும் , மனைவியும் சேர்ந்து குழந்தையை தரையில் தூக்கி போட்டு கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. சந்திரசேகர், அவரது மனைவி மஞ்சு , இவர்களுக்கு உடனடியாக இருந்த தாய் காளிமுத்து ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்தனர்.