கண்ணங்கோட்டையில் இரட்டைக் கொலையுடன் கொள்ளை - தினகரன் சாடல்!!

 
ttv

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள கண்ணங்கோட்டை பகுதியை சேர்ந்தவர் கனகம். 65 வயதான இவரது மகன் குமார்  வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி  வேலுமதி (35) என்ற மனைவியும், மூவரசு (12) என்ற மகனும் உள்ளனர். கனகம், தனது மருமகள் மற்றும் பேரனுடன் கண்ணங்கோட்டையில் வசித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 10ஆம் தேதி கனகம் வீட்டிற்குள்  நள்ளிரவு புகுந்த மர்மகும்பல், தூங்கிக்கொண்டிருந்த கனகம், வேலுமதி, மூவரசு ஆகியோரை அரிவாளால் வெட்டிவிட்டு 46 பவுன் நகைகளை திருடிச்சென்றனர். இதில் வேலுமதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கனகம், மூவரசு ஆகியோர் பலத்த காயமடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு தேவக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். நேற்று சிகிச்சை பலனின்றி  கனகம் பரிதாபமாக உயிரிந்தார்.   இந்த கொலை சம்பவம் குறித்து தேவகோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, 3 தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

tn

இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், "சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகேயுள்ள கண்ணங்கோட்டையில் இரட்டைக் கொலையுடன் கொள்ளை சம்பவம் நிகழ்ந்திருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. திருமணத்திற்காக வாங்கி வைக்கப்பட்டிருந்த நகைகள், வெள்ளிப்பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருக்கின்றன...



இதற்காக பெண்கள் இரண்டு பேர் கொல்லப்பட்டிருப்பது தமிழ்நாட்டில் கொள்ளையர்களுக்கு தி.மு.க. ஆட்சியில் எந்த அளவிற்கு துணிச்சல் வந்திருக்கிறது என்பதும் தமிழ்நாட்டின் இன்றைய சட்டம்-ஒழுங்கின் நிலைக்கு ஒர் எடுத்துக்காட்டு.  இதற்காக பெண்கள் இரண்டு பேர் கொல்லப்பட்டிருப்பது தமிழ்நாட்டில் கொள்ளையர்களுக்கு தி.மு.க. ஆட்சியில் எந்த அளவிற்கு துணிச்சல் வந்திருக்கிறது என்பதும் தமிழ்நாட்டின் இன்றைய சட்டம்-ஒழுங்கின் நிலைக்கு ஒர் எடுத்துக்காட்டு" என்று குறிப்பிட்டுள்ளார்.